states

img

முடங்கியது உத்தரப்பிரதேச சட்டமன்றம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச சட்டமன்ற பட்ஜெட் கூட்டம் ஆளுநர் உரையுடன் வெள்ளி யன்று தொடங்கியது. ஆளுநர் ஆனந்தி பென் படேல் உரையைத் தொடங்கு வதற்கு முன்பு, “இந்தியா” கூட்டணியில் அங்கம்வகிக்கும் சமாஜ்வாதி கட்சி தொடர் முழக்கம் எழுப்பியது.  மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட் டம், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து சமாஜ் வாதி எம்எல்ஏ-க்கள் சட்டமன்றத்தில் முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான வாச கங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பதாகைகளை சமாஜ்வாதி எம் எல்ஏ-க்கள் கையில் ஏந்தி சட்டமன்றத்தை வலம் வந்தனர். பட்ஜெட் கூட்டத்தொட ரின் முதல் நாளிலேயே உத்தரப்பிரதேச சட்டமன்றம்  முடங்கியது. உத்தரப்பிர தேச பட்ஜெட் பிப்., 5-ஆம் தேதி சமர்ப்பிக் கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.